கடம்ப
மரத்தில்
காய்கள் பூப்பந்து போன்று மஞ்சள் வண்ணத்தில்
பூத்துக்குலுங்கும்.
அப்போது இளம் வண்ணத்துப்
பூச்சிகள் தேன் உறிஞ்ச வட்டமிட்டு,
மரமெங்கும் பட்டாம் பூச்சிகள் நிறைந்து
கண்கொள்ளாக் காட்சியாகக் காணப்படும்.
இலையுதிர் மரம்.
இந்த
மரத்தில் இருந்து அதிக இலைகள் கொட்டுவதால் மண்ணில் கரிமவளத்தை கூட்ட உதவுகிறது.
பயன்பாடு
வணிகப்பயன்பாடு
கடம்ப மரம், பென்சில் மற்றும்
தீக்குச்சி தயாரிப்பு, காகிதம் தயாரிப்பு, வீடுகளின்
மேல்தள பலகை மற்றும் தேயிலை
பெட்டிகள் செய்யவும் பயன்படுகிறது.
மரச்சாமான்கள்
செய்யவும் கடம்ப மரம் உபயோகிக்கப்படுகிறது.
செயற்கை பிசிகளுடன் கடம்ப மர பலகைகள்
சுலபமாக ஒட்டும். இதனால் உறுதியான 'ப்ளைவுட்'
(Plywood) தயாரிக்க கடம்ப மரம் பயனாகிறது.
இம்மரத்தின்
பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் பூத்து
அதிக நறுமணம் வீசுவதால் தேனீக்களால்
அதிகளவில் கவரப்படுகின்றன. அதனால், தேனி வளர்ப்புக்கு
உதவுவதோடு மற்றப் பயிர்களின் மகசூலும்
கூடுகிறது.
வெள்ளைக்கடம்பு
என்னும் மரம் சாலையோரங்களில் வளர்க்க
ஏற்ற மரம்.
இப்பூக்களில்
இருந்து நீராவி வடித்தலின் மூலம்
கிடைக்கும் தைலம், சந்தன எண்ணெய்
உடன் சேர்ந்து வாசனை திரவியம் தயாரிக்க
பயன்படுகிறது. 'அத்தர்' தயாரிப்பில் கடம்ப
மர பூக்கள் இடம் பெறுகின்றன.
இதன்
பலகையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கட்டிலில் படுத்தால். அலுப்பு நீங்கி, சுகமான
தூக்கம் வரும்.
வெள்ளை
கடம்ப மரத்தை மகசூல் செய்வதன்
மூலம், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு பல லட்ச ரூபாய்
வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடம்பின்
இலைகள், கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுகின்றன.
வளரிடம்
அதிக
அளவில் தண்ணீர் உள்ள பகுதிகளில்
செழிப்பாக வளரக்கூடியது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இம்மரம் ஆழமான, ஈரமான,
நல்ல வடிகால் உள்ள வண்டல்
மண் நிலங்களில் மிக வேகமாக வளரும்.
மலை அடிவாரங்களில் உள்ள நிலங்களுக்கு ஏற்ற
மரமாக கடம்ப மரம் உள்ளது.வளமற்ற மற்றும் மண்ணில்
காற்றோட்டம் இல்லாத நிலங்களில் மரம்
வளராது. கடற்கரை பகுதிகளில் நடலாம்.
ஆனால், உப்பு நீர்ப்பகுதிகளில் வளராது.
நீர் செழிப்பு மிக்க சதுப்பு நிலங்களில்
நன்கு வளரும். எனவே, கிராமங்களில்,
ஏரிகளின் உட்பகுதியில் உள்ள நிலங்களிலும், ஏரியின்
கரையை ஒட்டிய நிலங்களிலும், ஆற்றோர
நிலங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம்.
மருத்துவப்பயன்பாடு
- சிறுநீரை
சரியாகப்பிரிக்க
- வாய்ப்புண்
நீங்க
- குழந்தைகளின்
வயிற்றுப்பொருமல் சரியாக
- காய்ச்சல்
குறைய
- உடல்வலி
அசதி நீங்க
- ஜீரண
உறுப்புகள் சரியாக செயல்பட்
- பெண்களின்
பிறப்புறுப்பு, கருப்பை கோளாறுகளை சரிசெய்ய
- தாய்மார்களுக்கு
பால் சுரக்க
- உடல்சூட்டைத்தணிக்க
என
பல்வேறு நோய்களுக்கு இதன் இலைகள், பட்டைகள்,
கனிகள் ஆகியன பயன்படுகின்றன
வேதிப்பொருள்கள்
இம்மரத்தின்
இலை மற்றும் பட்டைகளில் இருந்து
காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாயிடுகள் தயாரிக்கப்படுகின்றன.
இலைகளில்
இருந்து தயாரிக்கப்படும் குளோரா ஜெனிக் அமிலம்
ஈரல் பாதுகாப்பு மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடம்பமரம்
|
வேறு பெயர்கள்
|
மரா,
மரவம், வள்ளி, கடம்பை
|
சமஸ்கிருத பெயர்
|
கடம்பு
|
அறிவியல் பெயர்
|
1.Anthocephalus indicus
2.Anthocephalus Cadamba
3.Neolamarchia cadamba
|
வகை
|
மஞ்சக்கடம்பு,
வெள்ளைக்கடம்பு, சின்னக்கடம்பு
|
கடம்பமரக்கன்றுகள் தேவைப்படுவோர் கீழே உள்ள எண்ணைத்
தொடர்பு கொள்ளவும்
8608734392